Monday, April 14, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 2

இணையத்தின் மூலம் பணம் - உண்மையா? (முதல் பகுதியை படித்துவிட்டு மேற்கொண்டு தொடர்ந்தால் இன்னும் சிறப்பாக புரியும்!! )

இணையத்தின் மூலம் பணம் என்பது எனக்கு தெரிந்த அளவில் உண்மை! ஆனால் எல்லோரும் சம்பாதிக்க முடியாது. கொஞ்சம் விவரம் தெரிஞ்சாகணும். எடுத்த உடனே கோடிகளில் சம்பாதிக்க முடியாது.பயிற்சி வேண்டும். குறிப்பாக எங்கெல்லாம் ஏமாறக்கூடாது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

”டேட்டா எண்டரி வேலை.இத்தனை பக்கம் அடிக்கணும். ஒரு பக்கத்துக்கு ஆறு ரூபாய் கொடுப்போம்” என்று சொல்லி வேலை கொடுத்தார்கள். நண்பர் ஒருவருக்கு. இணையம் தேவையில்லை.வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் போதுமானது என்றார்கள். எவ்வளவோ செலவு பண்றோம் இத பண்ண மாட்டோமா? என நண்பர் கம்ப்யூட்டர் வாங்கினார்.

கம்ப்யூட்டர் வாங்கிய கதை சுவாரசியமானது. ரெண்டு மூணு பேரிடம் விசாரித்திருக்கிறார்.”10ஆயிரத்துக்கு வாங்கினால் கம்ப்யூட்டர் சீக்கிரமே போய்டும். கான்ஃபிகரேசன் சரியா இருக்காது. ஸ்லோவா இருக்கும்.55 ஆயிரத்துல ஒண்ணு வந்துருக்கு. அட்டகாசமா இருக்கும்” என அவர் தலையில் கட்டினார்கள்!

அதான் மாசம் ஆனா முப்பது ஆயிரம் ரூபா சம்பாதிக்க போறோமே.. போட்டதெல்லாம் ஆறு மாசத்துல எடுத்துட மாட்டோம்.என சகட்டுமேனிக்கு செலவு செய்தார்.ஒரு பக்கம் அடித்தால் ஆறு ரூபாய்.ஆயிரம் பக்கம் அடித்தால் ஆறாயிரம் என்று கணக்கு போட்டு தான் ப்ராஜக்ட் எடுத்தார். நண்பருக்கு டைப்பிங்க் தெரியாது. “அதெல்லாம் ஈஸி. நாளு நாள் அடிச்சா நமக்கே வந்துடும்.” என்று யாரோ உசுப்பேத்தி இருக்கிறார்கள்!

நண்பர் ஒரே ஒரு பக்கத்தை அடிக்க ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டார். ஒரு நாள் முழுவதும் செலவிட்டு 6 பக்கம் அடித்து முடித்திருந்தார். இப்படி ஒரு வாரம் கஷ்டபட்டு 50 பக்கம் முடித்து கொடுத்தார்.. எல்லாமே தப்பு தப்பாக அடித்திருந்தார்.தப்புக்கெல்லாம் பணம் கழித்துவிட்டு 150ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஒரு மாசம் கழிச்சி உங்க அக்கவுண்ட்ல கிரடிட் ஆகும். என்று வங்கி கணக்கு கேட்டிருக்கிறார்கள்.இவர் இதுக்குண்ணே தனியா அக்கவுண்ட் ஒண்ணு துவங்கினார்.

மாதம் முழுக்க கஷ்டபட்டு ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். இந்த அமவுண்டுக்கு தான் 55 ஆயிரம் செலவு பண்ணி கம்ப்யூட்டர் வாங்கினார் நண்பர். நாள் முழுக்க மாங்கு மாங்கென்று கம்ப்யூட்டரை பிண்ணி பெடல் எடுத்து கஷ்டபட்டு அடித்ததில் சம்பாதித்த பணம் அது. இந்த டேட்டா எண்ட்ரி யாருக்கு பொருந்தும்? வீட்டில் கம்ப்யூட்டரை சும்மா வைத்துக்கொண்டு  நல்லா டைப்படிக்க தெரிந்த ஆசாமிக்கு தான் இந்த வேலை சரிபட்டு வரும்.

என்னென்ன பிரச்சினை வரும் என நாமாக யோசித்து கேட்க மாட்டோம். அவர்களாகவும் சொல்ல மாட்டார்கள். இன்னொரு வகை டேட்டா எண்ட்ரி கம்பெனிகள் இருக்கின்றன. நாம் என்ன தான் திறமையாக டைப்படித்துக்கொடுத்திருந்தாலும் காசு இப்போ தர்றேன் அப்பறம் தர்றேன் என்று ஆளை அலைய விடுவார்கள்! ஆனால் சரியாக செய்து சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

 நமக்கு விவரமும் தெரிந்திருக்க வேண்டும். அதே சமயத்தில் நன்றாக விசாரித்து தான் வேலை எடுத்து செய்ய வேண்டும். கொஞ்சம் அசந்தால் காசும் உழைப்பும் வீணாகிவிடும். அதே சமயத்தில் ஒருத்தரிடம் ஏமாந்தால் அடுத்து வரும் அத்தனை பேரையுமே அயோக்கியனாக பார்க்கத்தோன்றும்!

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 3ம் பாகம்

3 comments:

Unknown said...

arumayana pathivu...nanbar yentha company la irunthar yena solla mudiyuma?

natarajan said...

நண்பர் சுமார் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு இதை செய்தார்! நிறுவனம் பெயர் நினைவில்லை.. அவரிடம் விசாரித்து சொல்கிறேன்

varun said...

sir mturk.com nu oru website eruke athula naan orra nalula 5000 rs varai adithuerukuran athuku onnum perusa teriya vendiyathu ella anna ella nalum appadi erukathu but minimum one month la 10000 rs pannalam eppa antha webite la indian workers eduka matukanga naa munadiyaa open pannunanala enn kitta eruku